• May 20, 2024

லாரி மீது கார் மோதி 6 பேர் பலி ; குற்றாலம் அருவியில் குளித்துவிட்டு திரும்பியவர்கள்

 லாரி மீது கார் மோதி 6 பேர் பலி ; குற்றாலம் அருவியில் குளித்துவிட்டு திரும்பியவர்கள்

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகவதி அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த கார்த்திக், வேல் மனோஜ், சுப்பிரமணி, மனோகரன், போத்திராஜ்,எ உள்பட 6 பேர் நேற்று இரவு காரில் குற்றாலம் சென்றனர்.

அங்கு ஓட்டலில்  சாப்பிட்டு விட்டு அருவியில் குளித்தனர். நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்த அவர்கள் அதிகாலை 3 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டனர்.

புளியங்குடி அருகில்  சிங்கிலிப்பட்டி- புன்னையாபுரம் இடையே எதிர்பாராத விதமாக கேரள மாநிலத்திற்கு சிமெண்ட் ஏற்றிச் சென்ற லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.

இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த 6 பேரும் உடல் நசுங்கி பலியானார்கள். போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்ப்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் இறந்த 6 பேர் உடல்களும் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு உடல் கூராய்வு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *