• May 19, 2024

அட்லீ தயாரிக்கும் இந்தி சினிமா படப்பிடிப்பு தொடக்கம்

 அட்லீ தயாரிக்கும் இந்தி சினிமா படப்பிடிப்பு தொடக்கம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் நிறுவனம்  ‘விடி18’  என்ற தற்காலிக பெயர் சூட்டப்பட்ட இந்தி சினிமாவை தயாரிக்கிறது.. அதன் படப்பிடிப்பு தொடங்கி இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இயக்குனர் ஏ. காளீஸ்வரன் டைரக்ட் செய்யும் இந்த படத்தில்  வருண் தவான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் பெண் கதா நாயகியாக நடிக்கிறார். வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி.எஸ். அவினாஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இந்த படத்திற்கு கிரண் கவுசிக் ஒளிப்பதிவு செய்கிறார், எஸ். தமன் இசை அமைக்கிறார்.ஜியோ ஸ்டுடியோஸ், சினி 1 ஸ்டுடியோஸ் மற்றும் ஏ ஃபார் ஆப்பிளுக்காக முரத் கேதானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்த அதிரடி பொழுதுபோக்கு படம். படத்தின் தொடக விழா மும்பையில் பிரமாண்டமாக நடைபெற்றது.,

தொடர்ந்து தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் தலைப்பு விரைவில் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் மற்றும் ஜவான் போன்ற பிளாக்பஸ்டர் படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குனர் அட்லீ, இப்போது தனது தயாரிப்பு நிறுவனமான ஏ ஃபார் ஆப்பிள் மூலம் தனது உதவி இயக்குனர்களின் திறமைகளை ஆதரிக்கவும், வெளிப்படுத்தவும் தயாரிப்பில் இறங்கியுள்ளார். அவரது முந்தைய தயாரிப்புகளான ‘சங்கிலி புங்கிலி கதவ தொர’ மற்றும் ‘அந்தகாரம்’ ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்றதுடன் வணிக ரீதியாக வெற்றி பெற்றன.

ஏற்கனவே தமிழ் திரையுலகில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள அட்லீ, தற்போது பாலிவுட்டில் வெற்றிகரமான தயாரிப்பாளராக முத்திரை பதிக்க உள்ளார். ஜவான் படத்தில் ஷாருக் கானுடன் அவர் இணைந்து நடித்தது அவரது ஒப்பற்ற திரைப்படத் திறமைக்கு ஒரு சான்றாகும்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *