மாவட்ட ஆக்கிப்போட்டி : பாண்டவர்மங்கலம் அணிக்கு முதல் பரிசு
கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் ஆக்கி கிளப் சார்பாக 18 ஆம் ஆண்டு அய்யாசாமி நினைவு மாவட்ட அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி கோவில்பட்டி செயற்கைப்புல் ஆக்கி மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றது இப்போட்டியில் 12 அணிகள் கலந்து கொண்டு விளையாடின
இறுதிப்போட்டியில் பாண்டவர்மங்கலம் ஆக்கி அணியினரும் இலுப்பையூரணி டாக்டர் அம்பேத்கார் ஆக்கி கிளப் அணியினரும் விளையாடினர் ஆரம்பம் முதல் இறுதி வரை பரரப்புடன் போட்டி இருந்தது. இப்போட்டியை ரசிகர்கள் ஆரவாரம் செய்து ரசித்தனர். இறுதியில் பாண்டவர்மங்கலம் ஆக்கி கிளப் அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச் சென்றனர்.
முதல் பரிசாக சுழற் கோப்பையும் ரூ.8000 பெற்றனர் இரண்டாவது பரிசாக டாக்டர் அம்பேத்கர் அணியினருக்கு சுழற் கோப்பை மற்றும் ரூ. 6000 வழங்கப்பட்டது.
மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டியில் தெற்கு திட்டங்குளம் பாரதி ஆக்கி அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் இலுப்பை யூரணி11 அணியினரை வீழ்த்தி வெற்றி பெற்று மூன்றாவது பரிசாக சுழற் கோப்பை, ரூ. 4000 ரொக்க பரிdum பெற்றனர். நான்காவது பரிசை இலுப்பையூரணி11 அணியினர் சுழற் கோப்பை, ரூ. 2000 ரொக்கப்பரிசு.
பெற்றனர் பரிசளிப்பு விழாவுக்கு ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி தலைமை தாங்கினார். பாண்டவர்மங்கலம் ஆக்கி கிளப் செயலாளரும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி துணைத் தலைவருமான மணிமாறன், மூத்த ஆக்கி வீரர்கள் பொன்மணி, தமிழரசன், வசந்தகுமார், இளையராஜா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் அன்புராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு சுழற் கோப்பை மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கினார். முன்னதாக தேசிய aaக்கி நடுவர் முருகன் அனைவரையும் வரவேற்றார முடிவில் பாண்டவர்மங்கலம் ஆக்கி கிளப் துணைச் செயலாளர் தெய்வபாலன் நன்றி கூறினார்.
விழாவில் நகர்மன்ற உறுப்பினர் செண்பகமூர்த்தி,ஒன்றிய கவுன்சிலர் பொன்னுத்துரை ஆகியோர் கலந்துகொண்டனர். நடுவர்களாக கார்த்திக் ராஜா , கிருஷ்ணமூர்த்தி, சந்தானராஜ் ,ராயர், சுதாகர் ,கார்த்திக், சுமித் , செந்தில்குமார், ஆகியோர் பணியாற்றினர்.போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வசந்த் ராஜா, சுரேந்தர், சுரேஷ்குமார், எட்டு ராஜ் , சிவசெல்வம் ,ராஜேஷ், ஆகியோர் செய்திருந்தனர்.