விஜயகாந்த் உடலுக்கு எடப்பாடி பழனிச்சாமி, உதயநிதி ஸ்டாலின் மரியாதை
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் இன்று காலை மரணம் அடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் விஜயகாந்த் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகிறார்கள். முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, இன்று மாலை விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் டி ஜெயக்குமார் சென்று இருந்தார்.
விஜயகாந்த் மனைவி பிரேமலதாவை சில நேரம் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பிரேமலதா மற்றும் அவரது தம்பி சுதீஷ் ஆகியோருக்கு ஆறுதல் கூறி விட்டு கிளம்பிச் சென்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, சினிமா டைரக்டர் விஜய டி ராஜேந்தர், கவிஞர்வைரமுத்து உள்பட ஏராளமானவர்கள் வைகோ உடலுக்கு மரியாதை செலுத்தி சென்றனர்.