• May 20, 2024

வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு பா. ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் ; மண் சட்டிகளை உடைத்ததால் பரபரப்பு

 வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு பா. ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் ; மண் சட்டிகளை உடைத்ததால் பரபரப்பு

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வு என்ற பெயரில் அப்பாவி ஆட்டோ தொழிலாளர்களுக்கு வழக்கத்தை விட அதிகமாக அபராதம் விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

அபராதம் செலுத்திய பின்னும், கூடுதல் பணம் செலுத்தினால் தான் வாகனத்தை ஒப்படைப்போம் என்று சொல்லி வருவதால் அதனை கண்டிக்கும் விதமாக கோவில்பட்டி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய, கோவில்பட்டி நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகளும், அணி மற்றும் பிரிவுகளின் மாவட்ட நிர்வாகிகளும், கோவில்பட்டி நகர, ஒன்றிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
மண்சட்டியை கையில் ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அவர்களை கலைந்து போக சொன்னார்கள்.
அதையும் மீறி ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது. இதை தொடர்ந்து போலீசார் கைது நடவடிக்கையில் இறங்கினார்கள்.
அப்போது பாஜகவினர் திடீரென மண் சட்டியை தரையில் போட்டு உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *