வருமான வரித்துறை சோதனை: மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகம் விளக்கம்
தூத்துக்குடி வி.இ. ரோட்டில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
வருமான வரித்துறை சோதனை தொடர்பாக மெர்க்கன்டைல் வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
வங்கியின் தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
எங்கள் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம்.. அதிகாரிகள் கோரிய விளக்கங்கள் மற்றும் விவரங்களுக்கு பதிலளித்து, தேவையான தகவல்களை தொடர்ந்து வழங்குவோம்.
வங்கியின் வணிகச் செயல்பாடுகள் வழக்கம் போல் தொடர்ந்தன. மேலும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்.
இவ்வாறு வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.