• May 20, 2024

விருதுநகர்-ராஜபாளையம் தொழில் முனைவோர் வர்த்தக இணைப்பு கூட்டம்

 விருதுநகர்-ராஜபாளையம்  தொழில் முனைவோர் வர்த்தக இணைப்பு கூட்டம்

ஜே.சி.ஐ அமைப்பின் துணை அமைப்பான ஜே.காம். , வர்த்தக
இணைப்புக்கான ஒரு அங்கமாக திகழ்கிறது. இந்த அமைப்பின் விருதுநகர்-ராஜபாளையம் தொழில் முனைவோர் வர்த்தக இணைப்பு  கூட்டம் விருதுநகரில் நடந்தது.

இக்கூட்டத்தில் விருதுநகர் ஜே.காம் சேர்மன் சிவராச குமார், துணை சேர்மன் சுருளிராஜன், செயலாளர் பழனிகுமார், பொருளாளர் கார்த்திக்குமார், பயிற்சியாளர் ராஜூ, ராஜபாளையம் ஜே.காம் சேர்மன் ராகுல் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்,.

வர்த்தக இணைப்பு கூட்டத்தில் தொழில் முனைவோர் 34 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தொழில் பற்றிய விவரங்களை  விளக்கி பேசினார்கள்.

இதை தொடர்ந்து மற்றவர்களுக்கு தேவையான தொழில் தேவை குறித்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர். இதன் மூலம் தொழில் முனைவோருக்கு இடையே வர்த்தக இணைப்பு கிடைத்தது. மேலும் தங்கள் தொழிலை பெருக்கி கொள்வதற்கான வாய்ப்பும் கிடைத்தது.

கூட்டத்தில் சிறப்பாக பேசியவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இறுதியில் அனைவரும் குரூப் போட்டோ எடுத்துகொன்டனர்,.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *