மின் கட்டண உயர்வு: கோவில்பட்டியில் பா.ஜனதா போர்க்கொடி
மின் கட்டண உயர்வை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் பா.ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவில்பட்டி பஸ் நிலையம் முன்பு தேவர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பா.ஜனதா கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன், துணை தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய தலைவர் கந்தசாமி மற்றும் அரசு தொடர்பு பிரிவு மாநில துணைத்தலைவர் சூரிய நாராயணன், மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் கோவில்பட்டி பாலா மாவட்டசெயலாளர் மாரிமுத்து ராஜா, நகர செயலாளர்கள் வெள்ளைச்சாமி , அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் மகளிர் அணி மாநில செயலாளர் உமாரதி ராஜன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் சோழன் பழனிச்சாமி ஆகியோரும் பங்கேற்றனர்.
திமுக அரசே! பெட்ரோல் விலையை உடனே குறைத்திடு, குடும்ப பெண்களுக்கு மாத உதவி தொகை ரூ.1000 உடனே வழங்கிடு, பாரதிய ஜனதா கட்சியினர் மீது தாக்குதலை, பொய் வழக்குகளை நிறுத்திடு, கோவில் சொத்துகளை தங்கத்தை கொள்ளையடிக்காதே, தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்று என்பன போன்ற வாசகங்கள் எழுதிய அட்டைகளை ஒவ்வொருவரும் ஏந்தி நின்றபடி கோஷம் எழுப்பினார்கள்.