• May 19, 2024

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் ‘லில்லியம்’ மலர்கள்

 கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் ‘லில்லியம்’ மலர்கள்

‘மலைகளின் இளவரசி’ என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
கோடைகாலத்தில் இங்கு நிலவும் சீதோ‌‌ஷ்ண நிலையை அனுபவிக்க அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
தற்போது கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக தங்கும் விடுதிகள் வேகமாக நிரம்புகின்றன. ஓட்டல்களில் கூட்டம் அலைமோதுகிறது. வழக்கமாக குளு, குளு சீசனையொட்டி கோடை விழா நடைபெறும், இதையொட்டி இங்குள்ள பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படும்

.இதற்காக நெதர்லாந்த்தில் இருந்து வரவழைக்கப்பட்டு நடவு செய்யப்பட்ட ‘லில்லியம்’ மலர் பூக்க தொடங்கி உள்ளது. வெள்ளை, சிவப்பு, ஆரஞ்சு, இளஞ்சிவப்பு நிறம், என பல்வேறு வண்ணங்களில் பிரையண்ட் பூங்காவில் லில்லியம் மலர்கள் பூத்துக்குலுங்குவதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து, மலர்களோடு தங்களை புகைப்படம் எடுத்து வருகின்றனர் வருகிற 24 ம் தேதி முதல் 29ம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெறுகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *