தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது
கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சங்கர் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் மற்றும் தலைமை காவலர் ஆனந்த் அமல்ராஜ், முதல் நிலை காவலர் பாண்டியராஜ் மற்றும் காவலர் சரவணக்குமார் ஆகியோர் நேற்று (19.05.2022) கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இனாம் மணியாச்சி பாலம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது இனாம் மணியாச்சி பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் சுப்புராஜ் (வயது 26) என்பவர் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக சரக்கு வாகனத்தில் கடத்தியது தெரியவந்தது.
உடனே சுப்புராஜை கைது செய்து அவரிடமிருந்து ரூ. 20,000/- மதிப்புள்ள 5784 புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.