• May 16, 2024

“கொடுஞ்செயல் எதிர்ப்பு” நாள் உறுதிமொழி

 “கொடுஞ்செயல் எதிர்ப்பு” நாள் உறுதிமொழி

ஒவ்வொரு ஆண்டும் மே 21ம் தேதியன்று கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு இன்று (20.5.2022) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் கீழ்க்கண்டவாறு உறுதிமொழி எடுக்கப்பட்டது.=

“அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகிய நம் நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம், எவ்வகையான கொடுஞ்செயல்களையும், வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம்.
எல்லா மக்களிடத்தும், அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றைப் போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறு விளைவிக்கும் பிரிவினை சக்திகளை எதிர்த்துப் போராடவும் நாம் உறுதி கூறுகிறோம்” இவ்வாறு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், மாவட்ட குற்ற பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம், குற்ற ஆவண காப்பக துணை கண்காணிப்பாளர் பிரேமானந்தன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஜெயராஜ், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, காவல் கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் ரேனியஸ் ஜேசுபாதம், குற்ற ஆவண காப்பக காவல் ஆய்வாளர் ஜெரால்டின் வினு, தொழில்நுட்ப பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணசாமி, காவல்துறை அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரிகள் சிவஞானமூர்த்தி, ஆறுமுகம் அலுவலக கண்காணிப்பாளர்கள் மாரிமுத்து, மாரியப்பன், மயில்குமார் மற்றும் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், தகவல் பதிவு உதவியாளர்கள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *