பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்த கொலை குற்றவாளி பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,’
அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜோஷ்வா தலைமை தாங்கினார். நகர காங்கிரஸ் தலைவர் அருண்பாண்டியன், எஸ்.சி மற்றும் எஸ்.டி. பிரிவு மாநில துணை தலைவர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
,மாவட்ட பொருளாளர் கார்த்திக் காமராஜ், பொது செயலாளர் சண்முகராஜ், செயலாளர் துரைராஜ், முன்னாள் மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி ஆகியோர் கண்டன உரையற்றினார்,
மேலும் மாவட்ட பொது செயலாளர் ராஜசேகரன், நகர பொது செயலாளர் செம்புக்குட்டி, கோவில்பட்டி கிழக்கு வட்டார தலைவர் மரியசூசை ராஜ், நகர செயலாளர் ஆறுமுகம், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி தலைவர் சுடலைமணி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் அமைப்பாளர் பிரபு மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்