செம்மண் திருடியவர் கைது; டிராக்டர் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் பவுலோஸ் தலைமையிலான போலீசார் கடந்த ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது, சாத்தான்குளம் – திசையன்விளை ரோடு பகுதியில், திசையன்விளை கீரைக்காரன்தட்டு பகுதியை சேர்ந்த சேர்மதுரை மகன் ராம பூபதி (வயது 36) என்பவர் உரிய அரசு அனுமதியின்றி டிராக்டரில் செம்மண் திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் பவுலோஸ் வழக்குப்பதிவு செய்து ராம பூபதியை கைது செய்து, அவரிடமிருந்து 1½ யூனிட் செம்மண் மற்றும் மணல் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரையும் பறிமுதல் செய்தார். இது தொடர்பாக் மேலும் விசாரணை நடந்து வருகிறது.