கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படத்தில் மத்திய அரசை விமர்சித்து பாடல்
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. அந்த படத்தில் கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள “பத்தலே, பத்தலே” என்ற பாடலில், மத்திய அரசை திருடன் என்று விமர்சித்து வரிகள் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சாதி ரீதியான பிரச்சினைகளை தூண்டும் வகையில் வரிகள் இடம் பெற்றுள்ளன என்றும், அந்த பகுதியை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செல்வம் என்ற சமூக ஆர்வலர் புகார் மனு கொடுத்துள்ளார்.
ஆன்லைன் மூலம் இந்த புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.