வீட்டில் தூங்கிய மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைது
விளாத்திகுளம் கந்தசாமிபுரத்தை சேர்ந்த ராமசாமி மனைவி வைய்யம்மாள் (வயது 80) . இவர் வீட்டில் தூங்கியபோது அதிகாலை நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் வைய்யம்மாள் அணிந்திருந்த தங்க செயினை பறித்து விட்டு தப்பிச் சென்று விட்டார்.
இதுகுறித்து வைய்யம்மாளின் மகன் சுப்புராஜ் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி (38) என்பவர் வைய்யம்மாளிடம் தங்க நகையை பறித்து சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் இளவரசு வழக்கு பதிவு செய்து பார்த்தசாரதியை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.40 ஆயிரம் மதிப்பிலான 1¼ சவரன் தங்க நகையை பறிமுதல் செய்தார்.