• May 19, 2024

கோவில்பட்டியில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டி; கனிமொழி எம்.பி. தகவல்

 கோவில்பட்டியில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டி; கனிமொழி எம்.பி. தகவல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செயற்கை புல்வெளி மைதானத்தில் 12 வது தேசிய அளவிலான ஆண்களுக்கான ஜூனியர் ஆக்கி போட்டி மே 17 முதல் 28 வரை நடைபெற உள்ளது.
இதையொட்டி ‘இது நம்ம கேம்’ என்ற ) ஸ்லோகனை கனிமொழி எம்.பி.அறிமுகம் செய்து வைத்தார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபொது கனிமொழி எம்.பி.கூறியதாவது:-
ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு நடத்தும் தேசிய ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டி கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கை புல் தரை மைதானத்தில் பகல் மற்றும் மின்னொளியில் மே மாதம் 17-ம் தேதி முதல் 28 -ம் தேதி வரை நடைபெற உள்ளது.
மொத்தம் 30 அணிகள் கலந்து கொள்ளும் இப்போட்டியில் 540 வீரர்கள் பங்கு பெருகிரார்கள். மொத்தம் 50 போட்டிகள் நடைபெற உள்ளது.

இப்போட்டியில் சிறந்து விளையாடும் வீரர்கள் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படுவார்கள்.
தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகள் காலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.
இப்போட்டிக்காக தமிழக அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு கடந்த ஒரு மாதமாக உத்தரபிரதேசம் மற்றும் சென்னையில் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடிய கோவில்பட்டியை சேர்ந்த 5 வீரர்கள் இந்திய ஜூனியர் அணிக்கு தேர்வாகியுள்ளனர். அதேபோல் இந்திய சீனியர் ஆக்கி அணிக்கு 2 பேர் தேர்வாகியுள்ளனர்.
இவ்வாறு கனிமொழி கூறினார்,.

அப்போது அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்,.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *