• May 19, 2024

‘தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என மாற்றலாம்’ – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

 ‘தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என மாற்றலாம்’ – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
தமிழகத்தில் அம்மா உணவகத்தை குறைத்து கருணாநிதி உணவகங்கள் அதிகரிக்கும் பணி நடைபெறுகிறது. பொது மக்களே இதை விரும்ப மாட்டார்கள். கூடிய விரைவில் தமிழ்நாடு கருணாநிதி நாடு என்று கூட மாற்றப்படலாம்.

தமிழக மக்கள் தி.மு.க. மீது வெறுப்பில் உள்ளனர். தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை உள்ளது. மக்கள் கொதித்து போய் உள்ளனர். அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை மக்கள் எங்களுக்கு கொடுப்பார்கள்.
தமிழ் நமது ஆட்சி மொழியாக உள்ளது. ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ளது. தி.மு.க. மும்மொழி கொள்கையை நேரடியாக ஆதரிக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இரு மொழிக் கொள்கை தான்.
இவ்வாறு டி.ஜெயக்குமார் கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *