• May 19, 2024

கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா; கொடியேற்றத்துடன் தொடக்கம்

 கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா; கொடியேற்றத்துடன் தொடக்கம்

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று (மே2) தொடங்கியது.
இதையொட்டி அதிகாலை 5.3௦ மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 9 மணிக்கு பூஜைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து யானை முன் செல்ல நாடார் உறவின் முறை சங்க தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம், தர்மகர்த்தா எஸ்.எம்.மாரியப்பன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், மண்டகபடிதாரர்கள், பொதுமக்கள், மஞ்சள் நீராட்டு இளைஞர்கள் புடை சூழ மங்கள பொருட்களுடன் கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.


பின்னர் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு பூஜைக்கு பிறகு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் கூடி இருந்தனர். அவர்கள் பக்தி கோஷம் எழுப்ப்பினார்கள்.
தொடர்ந்து கொடிமரத்துக்கு தீபாராதனை நடைபெற்றது. பிறகு பெண் பக்தர்கள் கொடி மரத்துக்கு பால், தண்ணீர் ஊற்றி வழிபட்டனர்.


கோவில் கொடியேற்ற நிகழ்ச்சியில் நாடார் உறவின் முறை சங்க துணைத்தலைவர் எம். செல்வராஜ், செயலாளர் எஸ்.ஆர். ஜெயபாலன், பொருளாளர் டி.ஆர்.சுரேஷ் குமார், உறுப்பினர்கள் கே. ராஜேந்திர பிரசாத், ஆர். ஜி. என். மாடசாமி, கே. மகேந்திரன், பிச்சைக்கனி, கோவில் செயலாளர் மாணிக்கம், உறுப்பினர்கள் ராஜேந்திரன், பாலமுருகன், திருப்பதி ராஜா, கோவில்பட்டி நகரசபை துணைத் தலைவர் ஆர்.எஸ். ரமேஷ், தொழிலதிபர்கள் ராஜவேல், கூடலிங்கம் ஆறுமுகச்சாமி, வி.எஸ்.எம். கண்ணன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
பின்னர் 12 மணிக்கு உச்சிகால பூஜைக்கு பிறகு நடை சாத்தப்பட்டது. மாலையில் 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 4 மணிக்கு பூஜை நடக்கிறது. மாலை 6 மணிக்கு கோவில் முன்புறம் கலையரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி தொடங்கும். இரவு 7 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடைற்றது. 8 மணிக்கு அடைக்கலம் காத்தான் மண்டபம் அருகே மண்டகப்படிதாரர் நிகழ்ச்சி நடந்தது . இரவு 11 மணிக்கு அம்மன் திருவீதி உலா முடிந்து வருதலை தொடர்ந்து பைரவர் பூஜை நடந்தது.

தொடர்ந்து 11-ந் தேதி வரை தினமும் கோவிலில் சிறப்பு பூஜைகள், மாலையில் கோவில் கலையரங்கத்தில் பக்தி நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இரவு 8 மணிக்கு அடைக்கலம் காத்தான் மண்டபத்தில் மண்டகபடி தாரர்களின் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *