வாக்குபதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி; ஆட்சியர் ஆய்வு
தூத்துக்குடி பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களுக்கான சின்னங்கள் பொருத்தும் பணி மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குப்பதிவுக்கு தயார்செய்யும் பணிக (EVM Setting) ஆகியவை பெல் நிறுவன பொறியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.
ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் நடைபெற்றதை தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர்.கோ.லட்சுமிபதி, நேரில் பார்வையிட்டார் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் (ஓட்டப்பிடாரம்) .கல்யாணகுமார், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் .சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.