• May 19, 2024

வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியர் லட்சுமிபதி ஆய்வு

 வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியர் லட்சுமிபதி ஆய்வு

தமிழ்நாட்டில் வருகிற 19-ந் தேதி நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதே போல் தேர்தலை எந்த வித தவறும் இல்லாமல் நேர்மையான முறையில் நடத்திட தேர்தல் அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு பணியாற்றிகொண்டுள்ளனர்.

நேற்று தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கோ.லட்சுமிபதி வாக்குசாவடி மையங்களை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கே.சண்முகபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் ஏற்படுத்த வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகளை ஆட்சியர் லட்சுமிபதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதை தொடர்ந்து கவர்னகிரி அரசு தொடக்கப் பள்ளி கவனிக்கத்தக்க வாக்குச்சாவடி மையம், குறுக்குச்சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையம், புளியமரத்து அரசடியில் உள்ள ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையம் ஆகியவற்றை ஆட்சியர் லட்சுமிபதி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆட்சியருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், , விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் மணியாச்சி துணை காவல் கண்காணிப்பாளர் லோகேஸ்வரன், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் சுரேஷ் ஆகியோர் சென்று இருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *