• May 9, 2024

மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் ரூ.86 ஆயிரம் பறிமுதல்

 மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் ரூ.86 ஆயிரம் பறிமுதல்

தமிழகத்தில் ஏப்ரல் 19 ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஓட்டப்பிடாரம் நீதிமன்றம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரியும் தூத்துக்குடி கூட்டுறவு வங்கி தணிக்கையாளருமான ரவிகுமார் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ‘

அப்போது தூத்துக்குடி அண்ணா நகர்12-வது தெருவை சேர்ந்த சிவசுப்பிரமணியன்(வயது 53) என்பவர் குறுக்குசாலையில்  இருந்து ஓட்டப்பிடாரத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவரரை நிறுத்தி  தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் உரிய ஆவணங்கள் இல்லாமல்கொண்டு வரப்பட்ட ரூ.863,78 ஐ  பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.. பின்னர் ஓட்டப்பிடாரம் மண்டல துணை தாசில்தார் சுடலைமாடனிடம் பணத்தை ஒப்படைத்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *