• May 20, 2024

ராஜீவ்காந்தி  கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சாந்தன் மரணம்

 ராஜீவ்காந்தி  கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சாந்தன் மரணம்

சாந்தன்(இன்றும், அன்றும்)

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர்களில் ஒருவர் இலங்க்கையை சேர்ந்த சாந்தன். இவர் 32 ஆண்டுகள்  சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட இலங்கை சாந்தன், கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 27ம் தேதி சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்ட அவர், தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்த நிலையில்  கடந்த 24ம் தேதி மத்திய  அரசு இதற்கான அனுமதியை வழங்கியிருந்தது.

ஆனால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த  சாந்தன், இன்று காலை 7.50 மணிக்கு மரணம் அடைந்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *