மூத்தோருக்கான மாநில பூப்பந்து போட்டி
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அடுத்த மறவபட்டி குழந்தை இயேசு உயர்நிலைப்பள்ளியில் மாநில அளவில் மூத்தோருக்கான பூப்பந்து போட்டி 2 நாட்கள் நடைபெற்றது.
இதில் நெய்வேலி, திருப்பூர், சிதம்பரம், சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், தூத்துக்குடி, திருவாரூர், கடலூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 36 அணிகள் பங்கேற்றன.
இப்போட்டியில் சிதம்பரம் டி.பி.பி.சி அணியினர் முதல் இடத்தையும், நெய்வேலி பி.பி. சி அணியினர் இரண்டாம் இடத்தையும், திருச்சி ஆர்.ஜே.ஜே.எஸ். அணியினர் மூன்றாம் இடத்தையும், தாடிக்கொம்பு ஏ.ஆர். ஹாஸ்பிடல் அணியினர் நான்காம் இடத்தையும் கைப்பற்றினர்.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழக பொதுச் செயலாளர் எழிலரசன் பரிசு வழங்கினார்.
முன்னதாக நடைபெற்ற தொடக்க விழாவில் தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகத் துணைத்தலைவர் டாக்டர். சீனிவாசன், தாய் சேமியா நிறுவனத்தின் உரிமையாளர் சுந்தர்ரேசன் மற்றும் மறவபட்டி குழந்தை இயேசு உயர்நிலைப் பள்ளி தாளாளர் பங்குத்தந்தை. அந்தோணிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.