நாகை மாவட்டம் திருமருகல் அருகே திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு , தேர் ஊர்வலம் நடந்தது. இந்த கோவில் திருவிழாவில் அருகேயுள்ள கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனால், மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இரவு 11.50 மணிக்கு வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். 10 அடி தொலைவு தேர் சென்ற நிலையில், தேரின் சக்கரம் ஏறியதில் வாலிபர் ஒருவர் ஒருவர் சிக்கி உயிரிழந்தார். தேருக்கு முட்டுக்கட்டை போட்டபோது இந்த […]
ராமேசுவரத்தில் அமைந்து உள்ள ராமநாதர் கோவிலில் அமாவாசை நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த நாட்களில் வழக்கத்தை விட வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும் இந்த நிலையில் சித்திரை மாதத்தின் சர்வ அமாவாசையான இன்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுவதற்காக பக்தர்கள் காலை முதலே கடற்கரையில் குவிய தொடங்கி விட்டனர்.கடற்ரைக்கு வந்த பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு, கடலில் புனித நீராடினர். பின்னர் ராமநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் […]
குமரி மாவட்டம் குலசேகரம் திருவட்டார் அருவிக்கரை, பேச்சிப்பாறை, திற்பரப்பு, சுருளோடு, பெருஞ்சாணி போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் சுமார் இரண்டு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் சிற்றாறு பகுதிகளில் தண்ணீர் அதிகரித்து வருவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. வெளி மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் தினமும் சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கிறார்கள். கடந்த ஆண்டு […]
தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் கூறியதாவது:- இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிட தமிழக அரசு தயாராக உள்ளது. இலங்கையில் மண் எண்ணெய் வாங்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ரூ. 15 கோடியில் 500 டன் பால் பவுடர்களை இலங்கைத் தமிழர்களுக்கு வழங்க தமிழக அரசு தயாராக இருக்கிறது. ரூ. 80 கோடி மதிப்பில் 40,000 டன் அரிசியை இலங்கை தமிழர்களுக்கு வழங்கவும் தமிழக அரசு […]
கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி தர்மலட்சுமி. இவர்களது மகன் முத்துமாரியப்பன்.இவர் டிப்ளமோ மெக்கானிக் என்ஜினீயரிங் படித்துவிட்டு மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கேம்ரூன் பகுதியில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.இவருக்கும் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கேம்ரூனில் வசிக்கும் எம்மா எஞ்சிமா மொசொக்கே என்பவரின் மகள் வால்மி இனாங்கா மொசொக்கே என்பவருடன் காதல் ஏற்பட்டது. 2 பேரும் தங்களது காதல் விவகாரத்தை இருவரது வீட்டிலும் தெரிவித்து சம்மதம் பெற்றனர். மேலும் வால்மி இனாங்கா இந்தியாவில் திருமணத்தை […]
சென்னை ஐ.ஐ.டி.யில் கடந்த 19-ந் தேதி ஒரு சில மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.இந்நிலையில் ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், ஊழியர்கள் 6 ஆயிரத்து 650 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.இதன் முடிவுகள் வரத்தொடங்கியுள்ளன. இதனால், அங்கு பாதித்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில், மேலும் 11 பேருக்கு தொற்று இருப்பது […]
தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்(வி.ஏ.ஓ.), தட்டச்சர், இளநிலை உதவியாளர், நில அளவையாளர் உள்ளிட்ட 7 ஆயிரத்து 301 அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 -ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை மார்ச் 30 -ம் தேதி முதல் ஏப்ரல் 28 -ம் தேதி வரை அளிக்கலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்திருந்தது. அதன்படி நேற்று நள்ளிரவுடன் விண்ணப்பம் அளிப்பதற்கான காலக்கெடு நிறைவடைந்தது. இதன்படி […]
108 வைணவத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுகிறது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நம்பெருமாள் தங்க கருடன், யாழி, கற்பக விருட்சம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து 7 ஆம் திருநாளான நேற்று முந்தினம் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் திருவிகையில் நெல்லளவு கண்டருளினார். அதன் பிறகு ஆழ்வார் […]
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள ஆடலூர், கே.சி.பட்டி, பூமலை, பெரியூர், பள்ளத்துக்கால்வாய் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் அதிக அளவில் விவசாயம் நடந்து வருகிறது.கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. காட்டு யானைகள் அந்த பகுதியில் உள்ள காபி தோட்டங்களுக்குள் புகுந்து தோட்டத்தில் உள்ள முள்வேலியை உடைத்து சேதப்படுத்துவதுடன் வாழை, காபி, ஆரஞ்சு போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.நேற்று இரவு ஆடலூர், அமைதி சோலை பகுதியில் ஒரு யானை புகுந்து வாழை, காபி, ஏலக்காய் […]
தமிழக அரசின் தலைமை நிலைய செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-1.5.2022 உழைப்பாளர் தினம் அன்று அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.*கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதி மக்களுக்கு முறையாக தெரிவிக்கப்பட வேண்டும் .*2020 – 2021 மற்றும் 2021- 2022 கடந்த நிதியாண்டில் வரவு செலவுகளை ஊராட்சி அலுவலகத்தில் பிளக்ஸ் பேனர்கள் மூலம் நோட்டீஸ் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.* 500 பேர் கொண்ட கிராமத்தில் கிராமசபை கூட்டத்தில் 100 நபருக்கு குறையாமல் கலந்து […]
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022