• May 19, 2024

கத்தி முனையில் பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது

 கத்தி முனையில் பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது

விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் ஆய்வாளர் இளவரசு தலைமையில் உதவி ஆய்வாளர் தேவராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, விளாத்திகுளம்- எட்டயபுரம் ரோடு பகுதியில் உள்ள ஒரு கடை அருகே சந்தேகத்திற்க்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது அவர்கள் விளாத்திகுளம் ஆற்றங்கரை பகுதியை சேர்ந்த எட்டுராஜ் மகன் முத்துராஜ்(22) மற்றும் அயன் பொம்மையாபுரம் பகுதியை சேர்ந்த முருகன் (53) என்பதும், அப்பகுதியில் வந்துகொண்டிருந்த ஒருவரிடம் பணம் கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது
உடனே 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *