பிளஸ்-2 பொது தேர்வு தொடங்கியது; தூத்துக்குடி மாவட்டத்தில் 20,370 பேர் எழுதினார்கள்
தமிழகம் முழுவதும் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான இன்று பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது. மொத்தம் 3,119 மையங்களில் நடைபெற்று வரும் இந்தத் தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். வருகிற 28-ந் தேதி வரை தேர்வு நடைபெற இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 842 பேரும், தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 462 பேரும், திருச்செந்தூர் கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 66 பேரும் ஆக மொத்தம் 20 ஆயிரத்து 370 பேர் தேர்வு எழுதினர். இவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக மாவட்டம் முழுவதும் 85 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
வினாத்தாள்கள் மாவட்டத்தில் 11 இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன. அங்கிருந்து ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டது.
தேர்வுக்காக மாணவ, மாணவிகள் முன்கூட்டியே காலை 9 மணிக்கே தேர்வு மையங்களுக்கு சென்று விட்டனர். 9.45 மணிக்கு தேர்வு மையத்துக்குள் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். 1௦ மணி முதல் 1௦ நிடமிடங்களுக்கு மாணவர்கள் வினாத்தாளை படிப்பதற்கு அனுமதி அளிக்கபப்ட்டது, அதன்பிறகு 1௦.15 மணிக்கு தேர்வு தொடங்கியது. இன்று மொழிப்பாடம் 1 தேர்வு நடைபெற்றது. பிற்பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெற்றது,
பல்வேறு தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.