• May 19, 2024

குடிபோதையில் வாலிபர்கள் தகராறு; தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் போலீஸ் கண்காணிப்பு

 குடிபோதையில் வாலிபர்கள் தகராறு; தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் போலீஸ் கண்காணிப்பு


தூத்துக்குடி முத்தையாபுரத்திலிருந்து துறைமுகம் செல்லும் சாலையில் உள்ளது எம்.தங்கம்மாள்புரம் அதனை அடுத்து உள்ள ஊர் சூசைநகர், இங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் அசன விழா, தங்கம்மாள் புரத்தில் உள்ள கோவிலில் கொடை விழா ஆகிய நிகழ்ச்சிகளை முன்னிட்டு ஊர் மக்கள் விழா ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன
இந்நிலையில் இரண்டு பகுதிகளை சேர்ந்த வாலிபர்கள் சிலர் ஒன்றாக மது அருந்தினார்கள். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது, இதில் தங்கம்மாள்புரம் கோவில் நிகழ்ச்சியில தொடர்பில்லாத வாலிபர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது,
இதனால் கோவில் நிர்வாகத்தில் உள்ளவர்கள் வாலிபர்களை சத்தம் போட்டுள்ளனர் .
இதனைத் தொடர்ந்து ஊர் முகப்பில் இருந்த டியூப் லைட்டுகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து மோதல் சம்பவங்கள் நடக்காமல் விடாமல் தடுக்கும் வகையில் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்,
தூத்துக்குடி போலீஸ் ஏ.டி.எஸ்.பி. கார்த்திகேயன் அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார், தொடர்ந்து அப்பகுதியில் அமைதி நிலவும் வகையில் போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *