நடந்து சென்றவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது; 2 பேர் பலி
கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்த வாசு என்பவரின் மகன் மதிவாணன் (வயது 22). இவரும் பாரதி நகரை சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் நாகராஜ் (21) இருவரும் நண்பர்கள்.
இவர்கள நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டியிலிருந்து கழுகுமலை நோக்கி சென்றனர். கழுகுமலை சாலையில் சங்கரலிங்கபுரம் பாலம் அருகே குருவிகுளம் கே புதூரை சேர்ந்த தங்கவேல் (52) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் மீது எதிர்பாரதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் நடந்து சென்றவர் படுகாயம் அடைந்தார். மேலும் மோட்டார் கீழே சாயந்தது. அதில் இருந்த நண்பர்கள் மதிவாணன், நாகராஜ் இருவரும் பலதம் காயம் அடைந்தனர்.
இதில் மதிவாணன் சம்பவ இடத்திலேயே பரிதாபாமாக உயிரிழந்தார். காயமடைந்த தங்கவேல் மற்றும் நாகராஜ் இருவரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தங்கவேல் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். நாகராஜ் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.