• May 20, 2024

ரூ.50 லட்சம் கரிமூட்டம், மழையில் சேதம்: மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.உதவி

 ரூ.50 லட்சம் கரிமூட்டம், மழையில் சேதம்: மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.உதவி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கே. துரைசாமிபுரத்தில் லட்சுமணன் (வயது 57) இவர் மனைவி குட்டியம்மாள் இருவரும்  பல வருடங்களாக கரிமூட்டம் தொழில் செய்து வருகிறார்கள்.

இவர்கள் வட்டிக்கு பணம் வாங்கியும் இவர் நகைகளை அடகு வைத்தும் அதிக முதலீடு செய்து விறகுகள் மற்றும் தூர் கட்டைகளை வாங்கி வந்து சில மாதங்களாக கரிமூட்டம் அமைத்து இருந்தார்களாம்.

கடந்த 29ஆம் தேதி காற்றுடன் சேர்ந்து கனமழை பெய்தது சில மணி நேரத்தில் 17 கரி மூட்ட குவியலும் உபகரணங்கள் சமையல் பாத்திரங்கள் அனைத்தையும் வெள்ள நீர் அடித்து சென்றதை கண்டு மிகவும் மனம் வருந்தினார்கள். ரூ. 50 லட்சம் முதலீடு பணம்  இழந்து விட்டதாக கூறி கண்ணீர் விட்டு கதறியதை அறிந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி வி மார்க்கண்டேயன் நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன் 50 ஆயிரம் உதவித்தொகை வழங்கினார். மேலும் அவர்களூக்கு  தைரியம் அளித்தார். அடுத்து அரசாங்கத்தால் உதவி பெற்று தருவதாகவும் கூறி சென்றார். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவும் மற்ற அதிகாரிகளிடம் பரிந்துரை செய்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *