விளாத்திகுளம் கந்தசாமிபுரத்தை சேர்ந்த ராமசாமி மனைவி வைய்யம்மாள் (வயது 80) . இவர் வீட்டில் தூங்கியபோது அதிகாலை நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் வைய்யம்மாள் அணிந்திருந்த தங்க செயினை பறித்து விட்டு தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து வைய்யம்மாளின் மகன் சுப்புராஜ் அளித்த புகாரின் பேரில் விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி (38) என்பவர் வைய்யம்மாளிடம் தங்க நகையை பறித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து விளாத்திகுளம் […]
கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. தினமும் அம்மன் வீதி உலா, கோவில் எதிரே உள்ள கலையரங்கத்தில் பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சிகள், அடைக்கலம் காத்தான் மண்டபம் அருகே கலை நிகழ்ச்சிகள் என விழா களை கட்டி உள்ளது.இன்று (மே 1௦) 9-வது நாள் மண்டகப்படிதாரர் கோவில்பட்டி இந்து நாடார் தீப்பெட்டி, குச்சி மற்றும் மூலப்பொருட்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் கூட்டமைப்பு ஆகும்.காலை 9 மணிக்கு தெற்கு நந்தவனத்தில் இருந்து மேள தாளம் முழங்க பால்குடம் […]
கோவில்பட்டி புத்துயிர் ரத்ததான கழகம் கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை தூத்துக்குடி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார்பாக கோவில்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம் ஆயிரவைசிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.முகாமிற்கு புத்துயிர் ரத்ததான கழக செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கினார்ர். மக்கள் நலம் அறக்கட்டளை தலைவர் மாரிமுத்து முகாமை தொடக்கி வைத்தார். முகாமில் கலந்துகொண்ட 66 பேருக்கு இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டது .19 பேர் மேல் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.=முகாமில் பகத்சிங் ரத்ததான கழக […]
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,௦௦௦ ஐ தாண்டி விட்டது. இந்த விலை உயர்வை கண்டித்து கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் அ.சரோஜா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது காலி சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாக குழு […]
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் வட்டார தலைவர் தங்கவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அகவிலைப்படியுடன் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். மருத்துவப்படி, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும், இலவச பஸ் பயண அட்டை வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், குடும்ப நல நிதி ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார துணை தலைவர் […]
கோவில்பட்டி அருகே வெள்ளாளன் கோட்டை பகுதியில் ஞான சிவசுப்ரமணியன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மின் கம்பத்தில் பழுது ஏற்பட்டதால் அதே பகுதியைச் சேர்ந்த தனியார் எலக்ட்ரிசியன் செல்லத்துரை என்பவரை அழைத்து சரி செய்ய சொன்னார்.அதன்படி செல்லத்துரை மின்கம்பத்தில் ஏறி மின் வயரை சரி செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதனால் மின் கம்பத்தில் தொங்கியபடி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார இந்த் துயர சம்பவத்தை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து […]
கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் 7-ம் நாள் மண்டகப்படி, நாடார் வர்த்தக குமாஸ்தாக்கள் சாரபில் நடைபெற்றது. மாலை 7 மணிக்கு அன்ன வாகனத்தில் வெள்ளிக்குடையின் கீழ் அருட் கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்தார். வலி நெடுக பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இரவு 7.25மணிக்கு கோவில் எதிர்புறம் கலையரங்கத்தில் பக்தி சொற்பொழிவு நடைபெற்றது. ‘சக்தியின் பெருமை’ என்ற தலைப்பில் டாக்டர் இராம. பூதத்தான் பேசினார். இரவு 8 […]
கயத்தாறு அருகே உள்ள சூரியமினிக்கன் கிராமத்தில் வடக்கு தெருவில் வசித்து வருபவர் கொம்பையாபாண்டியன். விவசாயி. இவரது மூத்த மகன் முருகன் (வயது 42). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இவர் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து ரகளை செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.மேலும் மது குடிப்பதற்கு அடிக்கடி தாய் பார்வதியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். நேற்று மது குடிப்பதற்கு பார்வதியிடம் பணம் கேட்டார். தன்னிடம் பணம் இல்லை என அவர் கூறினார். […]
கோவில்பட்டி கிருஷ்ணா நகர் அரசு செயற்கை புல்வெளி ஆக்கி மைதானத்தில் தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஆண்கள் ஆக்கி லீக் போட்டி 2 நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டன.நேற்று லீக் போட்டிகள் நடைபெற்றன. காலையில் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி அணியினரும் இலுப்பையூரணி ஆக்கி அணியும் மோதின. இதில் 5 – 0 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி அணி வெற்றி பெற்று […]
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் கூட்டரங்கில் தேநீர் கடை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தேநீர் கடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர். மாரியப்பன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில் கூறியதாவது:-தேநீர் கடைகளில் அரசு தடை செய்த பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்தக்கூடாது. பார்சல் தேநீருக்கு பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த கூடாது. தின்பண்டங்களை திறந்த நிலையில் ஈக்கள் மொய்க்காத அளவில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.தின்பண்டங்களை அச்சிடப்பட்ட பேப்பர்களில் கொடுக்காமல், […]
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022