• May 15, 2024

கோவில்பட்டியில் ஆக்கிபோட்டி: டெல்லி-பஞ்சாப் அணிகள் வெற்றி

 கோவில்பட்டியில் ஆக்கிபோட்டி: டெல்லி-பஞ்சாப் அணிகள் வெற்றி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஆக்கி மைதானத்தில் நடைபெற்று வரும் தேசிய ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டியின் 2-வது நாள் போட்டிகள் இன்று நடைபெற்றது.
காலையில் இரண்டு போட்டிகள் நடந்தன. முதல் போட்டியில் டெல்லி-உத்தரகாண்ட் அணிகள் சந்தித்தன. ஆரம்பத்தில் இருந்தே டெல்லி அணியினரின் ஆதிக்கம் காணப்பட்டது, அந்த அணி வீரர் நிகில் 2 கோல்கள் அடித்து அணிக்கு பலம் சேர்த்தார். ஆட்ட இறுதியில் 7-2 என்ற கோல் கணக்கில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
2-வது ஆட்டத்தில் பஞ்சாப்-ஆந்திரா அணிகள் களம் கண்டன. பஞ்சாப் அணி வீரர்களின் அதிரடி ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க ஆந்திரா அணி வீரர்கள் கடுமையாக போராடினார்கள். எனினும் அவர்கள் முயற்சி பலன் தரவில்லை. இறுதியில் பஞ்சாப்-அணி 3-௦ என்ற கோல் கணக்கில் ஆந்திராவை தோற்கடித்தது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *