ரூ. 20 லட்சம் மதிப்பில் ‘பார்வோ பிளாக்’ சாலை அமைக்கும் பணி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட பாலாஜி நகர் மற்றும் காமராஜர் நகர் மேற்கு பகுதியில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 20 லட்சம் மதிப்பில் ‘பார்வோ பிளாக்’ சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணியை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, நகரமன்ற உறுப்பினர் கவியரசன், நகரமன்ற உறுப்பினர் வள்ளியம்மாள் மாரியப்பன், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், ஒன்றிய மகளிர் அணி இணைச் செயலாளர் ராமலட்சுமி, கழகப் பேச்சாளர் பெருமாள் சாமி, கிளைச் செயலாளர் பொன்ராஜ், குத்தகைதாரர் தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.