விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
சிதம்பரத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன், விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் போட்டியிடுகிறார்கள். தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்காக சின்னத்தை பெற தீவிர முயற்சி மேற்கொண்டது.
அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் தொல். திருமாவளவன் தங்களுக்கு கடந்த முறை போட்டியிட்ட பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆனால் மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவார்களா?திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்களா என்பது விரைவில் தெரியவரும்.
நாம் தமிழர், மதிமுக உள்ளிட்ட கட்சிகளை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.