விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
கோவில்பட்டி தனுஷ்கோடிபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபபெற்றது. இதனையொட்டி மாலை 6 மணிக்கு செல்வ விநாயகரருக்கு மஞ்சள், பால், தயிர் உட்பட 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய சாமி செய்தார்
சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்த்தனர்,
கோவில்பட்டி மூக்கரை விநாயகர் கோவில் உள்பட பலவேறு கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
கோவில்பட்டியை அடுத்த ஓடைப்பட்டி வன்னி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது. இதையொட்டி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். அவருக்கு பல்வேறு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டன, பூஜைகளை குருக்கள் பிரசன்ன வெங்கடேஷ் செய்தார்.
தொடர்ந்து தீப ஆராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.