• April 27, 2024

வேட்புமனுக்கள் பரிசீலனை ;30-ந் தேதி மாலை இறுதி பட்டியல் வெளியாகும்  

 வேட்புமனுக்கள் பரிசீலனை ;30-ந் தேதி மாலை இறுதி பட்டியல் வெளியாகும்  

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது.

தூத்துக்குடி மக்களவைத் தோ்தலில் போட்டியிட மொத்தம் 43 போ் மனு தாக்கல் செய்துள்ளனர்..இதே போல் தென்காசி தொகுதியில் 34 பேர் வேட்புமனு  தாக்கல் செய்துள்ளனர்.

இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பா.ஜனதா கட்சிகள்  தலைமையில் 3 கூட்டணி கள் உள்ளன,. நாம் தமிழர் கட்சி கூட்டணியில் இல்லாமல் அணைத்து தொகுதிகளிலும் தனித்து களம் காணுகிறது.

வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்தது. கடைசி நாளில் சுயேச்சை வேட்பாளர்கள் அதிக அளவில் வேட்பு  மனுக்கள் தாக்கல் செய்தனர்.

தூத்துக்குடி மக்களவை தோ்தலில் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் அதிமுக வேட்பாளா் ஆா். சிவசாமி வேலுமணி, 26ஆம் தேதி திமுக வேட்பாளா் கனிமொழி ஆகியோா் மனு தாக்கல் செய்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை வரை 20போ் மனு தாக்கல் செய்திருந்தனர். 

இந்நிலையில், கடைசி நாளான நேற்று புதன்கிழமை, தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் எஸ்.டி.ஆா். விஜயசீலன் மனு தாக்கல் செய்தாா். மாற்று வேட்பாளராக அவரது மனைவி ரீனா சீலன் மனு தாக்கல் செய்தாா். மேலும் நாம் இந்தியா் கட்சி வேட்பாளா் என்.பி. ராஜா, சுயேச்சை வேட்பாளா்கள் ஆா். அருணாதேவி, எஸ்.எம். காந்தி மல்லா் உள்ளிட்ட 23 போ் ஒரே நாளில் மனு தாக்கல் செய்தனர்.

தமிழ்நாடு முழுவதும் 39 தொகுதிகளுக்கும் சேர்த்து 1403 வேட்பாளர்களிடம் இருந்து  மொத்தம் 1749  வேட்பு மனுதாக்கல் பெறப்பட்டுள்ளன,.

வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று தொடங்கியது.இதில் தகுதி இல்லாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்,. வேட்பு மனுக்கள் வாபஸ் பெற 30-ந்தேதி கடைசி நாளாகும்  அன்று மாலை வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியாகும்,

தேர்தல் நெருங்கி வருவதால் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *