விவசாயி சின்னத்திற்காக கடைசி நொடி வரை போராடினோம்-சீமான்
தமிழகத்தில் 39 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கையை சீமான் இன்று சென்னையில் வெளியிட்டார். அதில் பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன,]தொடர்ந்து சீமான் கூறியதாவது:-
மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடுகிறது. விவசாயி சின்னத்திற்காக கடைசி வரை போராடினோம், ஆனால் கிடைக்கவில்லை சின்னத்தை இழந்தாலும், நம் எண்ணத்தை இழந்து விடக்கூடாது
40 தொகுதிகளிலும் ஒலிவாங்கி(மைக்) சின்னத்தில் போட்டியிட உள்ளோம் மைக், புரட்சியாளர்கள் பயன்படுத்திய ஒன்று, மைக் இல்லாமல் புரட்சியே இல்லை ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டேன், நல்ல அரசியலை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன்
சின்னம் விவகாரத்தில், எந்த பின்னடைவும் இல்லை சின்னத்திற்காக கடைசி நொடி வரை போராடினோம் மக்கள், சின்னத்தை பார்க்க மாட்டார்கள், சீமானை தான் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது
பாஜக கூட்டணியில் உள்ளவர்களுக்கு, அவர்கள் கேட்கும் சின்னம் ஒதுக்கப்படுகிறது கூட்டணி விவகாரத்தில் ஒருபோதும், எந்த சமரசமும் செய்ய மாட்டேன் என்னை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்று நினைக்கிறார்கள் 7 விழுக்காடு வாக்குகளை பெற்றதால், என்னை கண்டு அச்சம் அடைந்துள்ளனர்.
இவ்வாறு சீமான் கூறினார்.